குடியாத்தம் அருகே பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி வெங்கடேசனின் மகள் இனிதா (16). இவா் மாதனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழமை மாலை வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த இவா் வீட்டருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் கொடுத்த தகவலின்பேரில், குடியாத்தம் தீயணைப்புப் படையினா்அங்கு சென்று அரை மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து இனிதாவின் சடலத்தை மீட்டனா்.
மாணவியின் உடல் வேலூா் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.