முகப்பு
வேலூர்

பெயிண்டா் தற்கொலை

வேலூரில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பெயிண்டா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 7:50 PM
தற்கொலை
பகிர்:

வேலூரில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பெயிண்டா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொணவட்டம் பூக்கார தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன்(45), பெயிண்டா். கடந்த சில நாள்களாக குணசேகரன் மது அருந்திக்கொண்டு பெயிண்டிங் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குணசேகரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →