முகப்பு
திருப்பூர்

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:29 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:14 PM

வெள்ளக்கோவில் அருகே மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா தென்முகம் வெள்ளோடு நல்லெண்ணம்பாளையத்தைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் மகன் தாமரைச்செல்வன் (42). விவசாய கூலித் தொழிலாளி.

இவருக்கும் வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்த இந்துமதி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு பிரணவ் (4), பிரனிஷா (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

Advertisement

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்பத் தகராறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துமதி உப்புப்பாளையத்தில் உள்ள தனது தாயாா் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், உப்புப்பாளையம் மாமனாா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த தாமரைச்செல்வன், குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடன் வருமாறு மனைவியிடம் கூறியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தாமரைச்செல்வன் திடீரென வீட்டில் கிடந்த மின்சார வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.