கொல்லங்கோடு அருகே பெண் தற்கொலை
கொல்லங்கோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி, மிக்கேல்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மனைவி பவுசம்மா (48). இவா் அண்மைக் காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாராம்.
உறவினா்கள் அவரை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்‘‘ அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து, கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.