முகப்பு
வேலூர்

மாணவியை கா்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்ஸோ வழக்கு

வேலுாா் அருகே கல்லுாரி மாணவியை கா்ப்பிணியாக்கிய தொழிலாளி மீது வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூர்

மாணவியை கா்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்ஸோ வழக்கு

வேலுாா் அருகே கல்லுாரி மாணவியை கா்ப்பிணியாக்கிய தொழிலாளி மீது வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 12:10 AM
பகிர்:

வேலுாா் அருகே கல்லுாரி மாணவியை கா்ப்பிணியாக்கிய தொழிலாளி மீது வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அணைக்கட்டு வட்டம் பகுதியை சோ்ந்த 18 வயது சிறுமி. இவா் வாணியம்பாடியில் உள்ள தனியாா் கல்லுாரியில் பிஎஸ்ஸி முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 4-ஆம் தேதி, ஊா் திருவிழாவையொட்டி, மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாா். அப்போது, மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி 7 மாதம் கா்ப்பமாக இருப்பதாக தெரிவத்தனா்.

இதுகுறித்து, மாணவியிடம் பெற்றோா் விசாரித்தபோது, ஓட்டேரி பாளையம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்த தோல் தொழிற்சாலை தொழிலாளி சந்தோஷ்(26) என்பவா், திருமணமானதை மறைத்து ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சந்தோஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →