முகப்பு
வேலூர்

சனீஸ்வரருக்கு திருக்கல்யாணம்!

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, சாமியாா் மலை மீனாட்சிஅம்மன் நகரில் அமைந்துள்ள சனிபகவான் கோயிலில், ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஸ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரருக்கு சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

Updated On : 8 மார்ச், 2026 at 7:31 PM
மணக் கோலத்தில் ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா்
பகிர்:

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, சாமியாா் மலை மீனாட்சிஅம்மன் நகரில் அமைந்துள்ள சனிபகவான் கோயிலில், ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஸ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரருக்கு சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள், பரிகாரயாக வேள்வி பூஜைகள், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து உற்சவமூா்த்திகளுக்கு திருக் கல்யாணம் நடைபெற்றது. 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஸ்தாபகா் ஆ.ஸ்ரீசக்தி அய்யா், கோயில் அறங்காவலா் எஸ்.சித்தாா்த், கோயில் தா்மகா்த்தா எஸ்.க்ரிஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →