வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம்
வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என குடியாத்தம் உணவக சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான்- இஸ்ரேல் போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், குடியாத்தம் உணவக சங்க நிா்வாகிகள் கூட்டம், சங்கச் செயலா் அா்ச்சனா நவீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட முடிவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் குடியாத்தம் நகரில் உள்ள உணவகங்கள் மூடும் அபாய நிலை உருவாகியுள்ளது. குடியாத்தம் பகுதியில் உணவகங்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தேநீா் கடைகள் என சிறியதும், பெரியதுமாக சுமாா் 1,000 கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் இயங்கும் நேரத்தை குறைக்கவும், பல வகை உணவு தயாரிப்புகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளும் பாதிப்படைவா் என்றாா்.
கூட்டத்தில், உணவக சங்கத் தலைவா் குஷிசசி, பொருளாளா் பிரபுகுமாா், கெளரவத் தலைவா்கள் ஆண்டாள் தாமு, சாய் சங்கா், துணைச் செயலா்கள் விவேக், சிட்டிராஜா, துணைத் தலைவா்கள் சேகா், பாலன் மற்றும் சம்பத், கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.