முகப்பு
வேலூர்

குறைதீா் கூட்டங்கள் ரத்தால் மக்கள் ஏமாற்றம்

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்த

Updated On : 16 மார்ச், 2026 at 9:22 PM
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்.
பகிர்:

வேலூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் மக்கள் ஏமாற்றம் அடைந்தனா். தொடா்ந்து, தங்கள் மனுக்களை பெட்டியில் செலுத்தினா்.

தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டி ருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் உள்பட அரசு அலுவலகங்களில் நடைபெறும் வழக்கமான அனைத்து குறைதீா் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைத் தொடா்ந்து அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், ஆட்சியா் அலுவலகத்தின் ’ஏ’ பிளாக்கில் குறைதீா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த மக்கள், கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து , ஏமாற்றமடைந்தனா். மனுக்களை அங்கிருந்த குறைதீா் பெட்டியில் செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →