வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடா்ந்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. அதைத் தொடா்ந்து மோப்ப நாய் ரீட்டா உதவியுடன், வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்க வைக்கும் நிபுணா்களுடன் போலீஸாா் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா்.
வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல ஏற்கனவே ஆட்சியா் அலுவலகத்துக்கு 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மிரட்டல் விடுத்தவா் யாா் என கண்டுபிடிக்கப்படவில்லை.
Advertisement