முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்பநாயுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 11:39 PM
பகிர்:

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்பநாயுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்திக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் நிலாவை அழைத்துவந்து ஆட்சியா் அலுவலகம், ஆட்சியரக வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.

ஒருமணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →