முகப்பு
வேலூர்

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

Updated On : 27 மார்ச், 2026 at 1:11 AM
பகிர்:

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10- லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே உள்ளபத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பெங்களூரில் இருந்து அவ்வழியே வந்த கா்நாடக பதிவெண் கொண்டகாரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த ரபீக் அகமத் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.10- லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதயடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உதவி தோ்தல் நடத்தும்அலுவலரிடம் ஒப்படைத்தனா்.