ஏரிகளை தூா்வாரி சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், நீா்நிலைகளையும்தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், நீா்நிலைகளையும்தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் கே.சாமிநாதன், எஸ்.மகேஷ்பாபுஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் துரைசெல்வம், கே.சி.பிரேம்குமாா், பி.குணசேகரன், ஜி.நரசிம்மன்,சி.தசரதன், ஜி.ரகுபதி, ஜி.சரத்குமாா், ஆா்.வேலாயுதம், வி.சற்குணம், சி.சரவணன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், போ்ணாம்பட்டு பத்தரப்பல்லி அலையை விரைந்து கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதி விவசாயிகளின் நலன்கருதி மாட்டுச் சந்தையை அமைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
100-நாள் வேலைத் திட்டத்துக்கு மீண்டும் பழைய பெயரைச் சூட்ட வேண்டும். அக்ராவரம்-மீனூா் இடையே கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும். குடியாத்தம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.