மகளிர் சுயஉதவி குழுவுக்கு விருது
உதகை, ஜன. 8: தமிழக மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 2009-2010-ம் ஆண்டுக்கான விருதுகள், சிறந்த மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகள், வட்டார அளவில் சான்றுகளாக வழங்கப்பட உள
உதகை, ஜன. 8: தமிழக மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 2009-2010-ம் ஆண்டுக்கான விருதுகள், சிறந்த மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகள், வட்டார அளவில் சான்றுகளாக வழங்கப்பட உள்ளதால், அதற்குரிய படிவத்தை உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பெற்று, உடனடியாக பூர்த்தி செய்து வரும் 13-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் முனியசாமி தெரிவித்துள்ளார்.