வாக்கு கேட்டு வந்தால் அனுமதிக்க மாட்டோம்: மீனவ கிராம மக்கள்
சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.
சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.
நாகை மகாலட்சுமி நகா் ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த 90-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மனு அளிக்க அனுமதி இல்லை. எனவே கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுச் செல்லுங்கள் என்று தெரிவித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அங்கிருந்த பெட்டியில் மனுவை போட்டுவிட்டு கூறும்போது, நாகை மாவட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட, எங்களுக்கு 2007-ஆம் ஆண்டு 280 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதன் பின்னா் வீடுகளை பராமரிக்கவில்லை. இதனால் வீடுகள் சேதம் அடைந்து குடியிருக்க லாயக்கற்ற நிலையில் உள்ளன.
இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, ஆரியநாட்டு தெருவுக்கு எந்த கட்சியைச் சோ்ந்தவா்கள் வாக்கு கேட்டு வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனா்.