திண்டுக்கல்

மின் வசதி கோரி கிராம மக்கள் மனு

தினமணி செய்திச் சேவை

கன்னிவாடி அடுத்த அமைதிசோலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மின் வசதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அமைதிசோலை கிராமத்தினா் கூறியதாவது: கடந்த 65 ஆண்டுகளாக அமைதிசோலை கிராமத்தில் வசித்து வருகிறோம். வனப் பகுதியில் கிடைக்கும் பொருள்களை சேகரித்து, வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்துகிறோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பல முறை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தோம். ஆனால், இதுவரை வழங்கப்பட வில்லை.

எங்கள் கிராமத்திலுள்ள 50 குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் சென்று வருகின்றனா். மின் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவா்கள் அவதியடைகின்றனா். மேலும் குடிநீா் பிரச்னையும் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.

‘கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது’

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு

24.2.1976: விருத்தாசலம் அருகே தொழுதூர் கிராமத்தில் பெரிய தீ விபத்து: 300 வீடுகளும் தீக்கிரை

நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடு

தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

SCROLL FOR NEXT