முகப்பு
தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாய்ப்பளித்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும்: செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை

Updated On : 1 மார்ச், 2026 at 8:16 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
பகிர்:

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், "சர்ச்சையை ஏற்படுத்தியக் கூடியவர்தான், பிரதமர். சர்ச்சையான பிரச்னைகளைக் கையில் எடுப்பதும், மதக் கலவரங்களை ஏற்படுத்துவதும், மக்கள் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்றிருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முகமாக பிரதமர் இருக்கிறார்.

அவர் ஒருமுறை இல்லை, எத்தனை முறை வந்தாலும் - தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடமில்லை. அவர் நூறு முறை வந்தாலும், அவரை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, ஆறுபடைகளுக்கும் சென்றாலும், அவரை முருக பெருமானே மன்னிக்க மாட்டான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, இங்கு ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழ்நாடு, தமிழ் மண் என்பது அவர்களுக்கான மண் அல்ல, அவர்களுக்கு உகந்த நிலமும் அல்ல.

தமிழ்நாட்டு மக்களால் பலமுறை புறக்கணிக்கப்பட்ட பாஜக, தற்போது அதிமுகவின் முகமூடியோடு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும், எடப்பாடி பழனிசாமி தில்லியில் அடகு வைத்து விட்டார்.

மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு வாய்ப்பளித்தால், தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.

ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் மக்கள் ஒருபோதும் பாஜகவையும் அதிமுகவையும் தமிழ்நாட்டில் காலூன்ற விட மாட்டார்கள்" என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

summary

Tamil Nadu will burn to ashes if AIADMK-BJP alliance is given a chance, says TN Congress Chief Selvapperunthagai

முழு கட்டுரையைப் படிக்க →