அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்டக் குழு கூட்டம்
திருப்பூர், ஜன. 8: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் சாலை, சர்வேஸ்வரா அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அ.சென்னிய
கோயம்புத்தூர்அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்டக் குழு கூட்டம்
திருப்பூர், ஜன. 8: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் சாலை, சர்வேஸ்வரா அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அ.சென்னிய
திருப்பூர், ஜன. 8: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் சாலை, சர்வேஸ்வரா அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அ.சென்னியப்பன் தலைமை தாங்கினார்.
முன்னாள் தலைவர் சி.வேலாயுதம், முன்னாள் கல்வித்துறை அலுவலக ஒன்றிய துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஊராட்சி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
குடிநீர் ஆபரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேம்டும்.
சத்துணவு, ஊட்டச்சத்து, குழந்தைகள் நல அமைப்பாளர்களை அரசு ஊழியராக்குதல், தொகுப்பூதியம், மதிப்பூதிய பணியாளர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துக்கு கொண்டு வருதல், திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு மற்ற மாநகராட்சிகளில் உள்ளதுபோல அனைத்து படிகளையும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தணிக்கையாளர் எம்.கந்தசாமி, வட்டக் கிளைத்தலைவர்கள் ஜோதிநாத் (அவிநாசி) தண்டபாணி (தாராபுரம்), தர்மலிங்கம் (திருப்பூர்), ராஜேந்திரன் (பல்லடம்), பாலசுந்தரம் (காங்கயம்), ராமதாஸ் (உடுமலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.