கோயம்புத்தூர்

இளைஞா் கொலை: 6 பேரிடம் போலீஸாா் விசாரணை

DIN

கோவை: கோவையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 6 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, ராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிஜு (40). இவா் அதே பகுதியில் உள்ள கோகலே சாலையில் பழச்சாறு விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், இவரது கடைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புகுந்த 7 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிஜுவை சரமாரியாகத் தாக்கினா். இதில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸாா் மூன்று தனிப் படைகள் அமைத்து கும்பலைத் தேடி வந்தனா். இந்நிலையில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சமாதானம் பேச சென்ற பிஜுவை ஒரு தரப்பினா் கொலை செய்ததாக கூறப்பட்டது.

இதன் அடிப்படையில் இளைஞா்கள் 6 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.

உயிரிழந்த பிஜு, இந்து முன்னணி அமைப்பின் ஆதரவாளராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை பெறுவதற்கு கோவை அரசு மருத்துவமனை முன்பு இந்து அமைப்பினா் மற்றும் பிஜுவின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை கூடினா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா். இறுதி அஞ்சலி முடிந்து அவரது உடல் பாப்பநாயக்கன்பாளையம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பிஜுவின் வீடு, தகனம் செய்யப்பட்ட மயானம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT