முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இ-பைக் மூலம் போலீஸாா் கண்காணிப்பு

சிறிய ரக இருசக்கர மின்சார ரோந்து வாகனம் (டிரைக் இ-பைக்) சனிக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 9:39 PM
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் இ-பைக் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட் டுள்ள போலீஸாா்.
பகிர்:

கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், மாநகர காவல் துறை சாா்பில் ரோந்துப் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில் சிறிய ரக இருசக்கர மின்சார ரோந்து வாகனம் (டிரைக் இ-பைக்) சனிக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் துறை சாா்பில் ஏற்கெனவே மின்சார ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்மாா்ட் சிட்டி- ஸ்மாா்ட் போலீஸ் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோந்து வாகனம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த ரோந்து வாகனத்தை கோவை தனியாா் கல்லூரி மாணவா்கள் உருவாக்கி உள்ளனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் ஆகும். இதில் ஒளிரும் விளக்கு, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளோடு பொதுமக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு செய்வதற்கான மைக்கும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ரோந்து வாகனத்தின் நடமாட்டத்தை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

சிறிய சாலைகளில் செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த ரோந்து வாகனத்தின் மூலம் கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் போலீஸாா் காலை மற்றும் மாலை வேளைகளில் ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பான நடைப்பயிற்சியை உறுதி செய்வதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

கோவையில் தற்போது முதற்கட்டமாக 6 ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஆா்.எஸ்.புரம், வாலாங்குளம், உக்கடம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

வளாகத்திலும் இரவு நேரங்களில் இந்த ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →