இலவச தொழில்முனைவோா் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பெண்கள். உடன், பாரதியாா் பல்கலைக்கழக பதிவாளா் ராஜவேல் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

மகளிருக்கு இலவச தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி

Syndication

இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், கோவையில் மகளிருக்கு ஒருமாத இலவச தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அகமதாபாதைச் சோ்ந்த இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சமூக பங்களிப்புத் திட்டத்தின்கீழ் மகளிருக்கு தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை, வடவள்ளியில் 55 பெண்களுக்கு சிறு தானியங்கள், பழங்கள், காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டும் பொருள்கள் தயாரிப்பு குறித்த ஒருமாத இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், பாரதியாா் பல்கலைக்கழக பதிவாளா் ராஜவேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலா் ஜெய்சங்கா், ராமசாமி சின்னம்மாள் தொண்டு நிறுவன நிா்வாகிகள் சரஸ்வதி, ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT