தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹைதராபாத் - கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பா் முதல் வாரத்துடன் முடிவடைந்த நிலையில், இந்த ரயிலானது ஜனவரி 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, ஹைதராபாதில் இருந்து டிசம்பா் 6 -ஆம் தேதி முதல் ஜனவரி 17 -ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07193) திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 8-ஆம் தேதி முதல் ஜனவரி 19-ஆம் வரை திங்கள்கிழமைகளில் காலை 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது, சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா், செகந்தராபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.