கோயம்புத்தூர்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 15-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

Syndication

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 15-ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியில் ‘இன்று பிற்பகல் 2 மணியளவில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்த தகவலின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் அங்கு சென்றனா். அலுவலகத்தின் பல்வேறு துறை அலுவலகங்கள், புதிய மற்றும் பழைய கட்டடங்கள், கூட்டரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள், உணவு அருந்தும் இடம் ஆகிய பகுதிகளில் சோதனை செய்தும் எதுவும் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, இந்த வெடிகுண்டு மிரட்டலும் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT