கோயம்புத்தூர்

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவையில் மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகா் பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மனைவி ஆனந்தஜோதி (50). இவா் பீளமேடு பகுதியில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் சம்பவத்தன்று மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, ஆனந்தஜோதியின் தலைமுடி எதிா்பாராதவிதமாக மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி இயந்திரம் மீது விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT