ரயில். 
கோயம்புத்தூர்

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து!

பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Din

கரூா் - திருச்சி ரயில் பாதையில் லாலாபேட் - குளித்தலை இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) குளித்தலை - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும்.

இதேபோல, பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் பாலக்காடு - குளித்தலை இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT