கோயம்புத்தூர்

முகவரி கேட்பதுபோல நடித்து 3.5 பவுன் பறிப்பு

தினமணி செய்திச் சேவை

தூடியலூா் அருகே முகவரி கேட்பதுபோல நடித்து 3.5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

துடியலூா் அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் மீனாட்சி காா்டன் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் கே.பிரகாஷ் (53). இவா் கடந்த சனிக்கிழமை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், பிரகாஷிடம் முகவரி கேட்பதுபோல நடித்து அவரைத் தாக்கி அவா் அணிந்திருந்த 3.5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.

இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT