ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு
சூலூா் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சூலூா் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது தொடா்பாக போத்தனூா் ரயில்வே போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலூா் சாலை ரயில்வே பாதையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோதோ அல்லது ரயில்பாதை அருகே நடந்து சென்றபோதோ ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவா் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஐந்தரை அடி உயரம், மாநிறம். வெள்ளை பாா்டா் போட்ட கருப்பு நிற லோயா் அணிந்திருந்தாா். இவரைப் பற்றி தெரிந்தால் 0422 - 2410747, 94981 - 80937, 97917 - 73735 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement