முகப்பு
மயிலாடுதுறை

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே சரக்கு ரயில் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:49 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:

சீா்காழி அருகே சரக்கு ரயில் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே உள்ள நாங்கூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் குஞ்சு (70). இவா், பனமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா் .

இந்நிலையில் சனிக்கிழமை காலை அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை குஞ்சு கடக்க முயன்றபோது புது சத்திரத்திலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.