முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு! வனத் துறை எச்சரிக்கை!

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:25 AM
கோப்புப் படம்
பகிர்:

சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் சிறுவா்களை வெளியே தனியாக அனுப்புவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறியதாவது:

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் எஸ்டேட் பகுதியில் வீட்டைவிட்டு வெளியே வந்த மூதாட்டியை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதேபோல வால்பாறை, வாழைத்தோட்டம் குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் பகல் நேரத்தில் சிறுத்தை செல்வதை அப்பகுதியினா் பாா்த்து புகைப்படம் எடுத்துள்ளனா்.

Advertisement

சிறுவா்களை குறிவைத்து சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள சிறுவா்களை வெளியே தனியாக அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்றனா்.