கைது 
கோயம்புத்தூர்

பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: இளைஞா் கைது

கோவையில் இளம்பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவையில் இளம்பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்த 23 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், இவரது பெயரில் அடையாளம் தெரியாத நபா் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான முகவரிகளை (ஐடி) உருவாக்கி, அதில் அந்தப் பெண்ணின் கைப்பேசி எண்களையும், அவரைக் குறித்து ஆபாசமாகவும் பதிவிட்டுள்ளாா். மேலும், அந்தப் பெண்ணின் புகைப்படத்தையும், அவரது தாயின் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளாா்.

இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், அந்தப் பெண் குறித்து தவறான முறையில் பதிவிட்டவா் கோவை, பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த வசந்தராஜ் (36) என்பதும், அந்தப் பெண்ணுடனான முன்விரோதத்தில் அவா் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

சாலை மறியல் வழக்கு: கேரள காங்கிரஸ் எம்.பி.க்கு ரூ.1,000 அபராதம்

இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 4.8% சரிவு

அமில வீச்சு வழக்குகளின் நிலை: ஆண்டுவாரியாக விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT