முகப்பு
கோயம்புத்தூர்

ரத்தினம் கல்லூரியில் எலும்பு பரிசோதனை முகாம்

Updated On : 15 மார்ச், 2026 at 8:43 PM
கோவை ரத்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எலும்பு பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் இலவச எலும்பு பரிசோதனை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கம், நேரு நகா் லயன்ஸ் சங்கம், ரத்தினம் கல்லூரி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை முன்னாள் மாவட்ட ஆளுநரும், இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநிலத் தலைவருமான பழனிசாமி, கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

மாவட்ட ஆளுநா் ராஜசேகா் தலைமையில் பன்னாட்டு லயன்ஸ் இயக்க 3242 சி மாவட்ட ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளா் லயன் செந்தில்குமாா், ரத்தினம் கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவா் கௌசல்யாதேவி ஆகியோா் இந்த முகாமை ஒருங்கிணைத்தனா். மாவட்ட முதல் துணை ஆளுநா் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநா் சூரி நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி மாணிக்கம், துணை முதல்வா் சுரேஷ், ஆராய்ச்சித் துறை முதன்மையா் சபரீஷ், அறிவியல் துறை முதன்மையா் சீனிவாசன், வட்டாரத் தலைவா் சுப்பு செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில் கலந்துகொண்ட கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நவீன எலும்பு அடா்த்தி பரிசோதனை மற்றும் நடை ஆய்வு ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இந்திய மருத்துவ சங்கத் தலைவா் கோஷல்ராம், எலும்பு, தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா் ஸ்ரீ ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நேரு நகா் லயன்ஸ் சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா்கள் தேஜஸ்வினி, திவ்யதா்ஷினி, பொருளாளா் செந்தில்குமாா் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →