கோயம்புத்தூர்

சூலூர் காவல் நிலையத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

DIN

சூலூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் மனு மீதான சிறப்பு விசாரணை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட  புறநகர் காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின் பேரில்,  நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில்,  சூலூர் காவல் எல்லைக்குள்பட்ட பொதுமக்கள்,  நிதி மோசடி,  பொருளாதார சம்பந்தமான பிரச்னைகள் குறித்து புகார் மனுக்கள் அளித்தனர். முகாமில் 50 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 28 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதில், கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன்,  கோவை கண்காணிப்பாளர் அலுவலக சிறப்பு காவலர்கள் ஆகியோர் இதில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT