வால்பாறை பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வால்பாறை பகுதியில் இரவு நேரத்தில் மட்டும் வனத்தைவிட்டு வெளியேறும் யானைகள், தற்போது பகல் நேரங்களிலும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அய்யர்பாடி எஸ்டேட் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள், தொழிலாளர்களின் குடியிருப்புகள், ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தின. இதேபோல், சின்கோனா எஸ்டேட் பகுதியில் உள்ள லாசன் தேயிலைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் புகுந்து யானைக் கூட்டத்தை அப்பகுதி மக்களும், வனத் துறையினரும் விரட்டினர்.
வனத் துறையினர் இரவு நேரத்திலும் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.