கோயம்புத்தூர்

இரண்டு வீடுகளில் 18 பவுன் திருட்டு

DIN

கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
 இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
 கோவை, பீளமேடு, பாலகுரு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கே.கார்த்திகேயன் (33). இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இவர், ஜூன் 16-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு ஈரோடு சென்றுவிட்டார். மீண்டும் 18-ஆம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
 வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ. 12 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
 மற்றொரு சம்பவம்:
 கோவை, சேரன் மாநகரைச் சேர்ந்தவர் அறிவழகன் (33). இவர், ஜூன் 15-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு பெங்களூரு சென்றுவிட்டார். மீண்டும் அவர் ஜூன் 18-ஆம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
 இச்சம்பவங்கள் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT