கோயம்புத்தூர்

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பழுதடைந்த நிலையில் உள்ள கோட்டூர் சாலை, மாக்கினாம்பட்டி சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், சூளேஸ்வரன்பட்டி மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி சேதமாகியுள்ளதை சரிசெய்து சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், 4-ஆவது வார்டில் உள்ள கிணற்றை சுத்தப்படுத்தி மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT