முகப்பு
கோயம்புத்தூர்

தெலுங்குபாளையத்தில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு

அன்னூர் ஒன்றியம், தெலுங்குபாளையத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

அன்னூர் ஒன்றியம், தெலுங்குபாளையத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அன்னூர் ஒன்றியம், பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முத்துசாமி( 38).
இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி  வருகிறார். இவருக்கு கடந்த சில நாள்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது.
இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தெலுங்குபாளையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சுகாதாரப்  பணியாளர்கள் டெங்கு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →