கோயம்புத்தூர்

சரவணம்பட்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

DIN

கோவை சரவணம்பட்டியில்  தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெறுகிறது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்,  திட்ட செயலாக்க அலுவலகம் (மகளிர் திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.
சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பத் துறை, உற்பத்தித் துறை, பொறியியல்,  ஆடை உற்பத்தி, கட்டுமானம், விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டயம், பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT