வால்பாறை உட்கோட்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மூடிஸ் காவல் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
வால்பாறையை அடுத்த முடீஸ் காவல் நிலையம் முடீஸ் எஸ்டேட் பஜார் அருகில் எஸ்டேட் நிர்வாகத்தினருக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், சோலையாறு அணைப் பகுதியில் ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் முடீஸ் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் (பொறுப்பு) நடேசன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சம்பத்குமார், முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.