மேட்டுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு வேளாண்மை உற்பத்தியாளர்கூட்டுறவு சங்கத் தலைவர் வான்மதி சேட் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்ராஜ், சட்டப் பேரவை உறுப்பினர் ஒ.கே.சின்னராஜ் ஆகியோர்கலந்து கொண்டு பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தனர்.
மாவட்ட மாநகர் பேரவைச் செயலாளர் நாசர், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர்அமானுல்லா, சங்க இயங்குநர்கள் ஜெயசங்கர், ரங்கராஜ், காண்காணிப்பாளர் கணபதி சுப்பிரமணி, பொதுமேளாளர் பேபி, லியாகத்அலி, மருதூர் ஊராட்சி முன்னாள்தலைவர் ரங்கராஜ், நியாய விலைக் கடை பொறுப்பாளர் மைதிலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.