கோயம்புத்தூர்

சத்துணவு ஊழியர்கள் மறியல்: 350 பேர் கைது

DIN

வரையறுக்கப்பட்ட மதிப்பூதியம்  உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 350 பேர் கைது செய்யப்பட்டனர். 
சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 3,500 என வழங்கப்பட்டு வரும் சிறப்புக் காலமுறை ஊதியத்தை மாற்றி ரூ. 15, 700 என வரையறுக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை ரூ. 3,500 ஆக  உயர்த்தி வழங்க வேண்டும். பணிக்கொடையாக  ரூ. 5 லட்சமாக வழங்க வேண்டும்.  குழந்தைகளுக்கான அரசு மானியமாக 60 பைசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரூ. 3 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் இன்னாசிமுத்து தலைமையில் சத்தணவு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதையடுத்து,  சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் பழனிசாமி ராஜகோபால் உள்ளிட்ட 350- க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT