கோயம்புத்தூர்

கமல் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

DIN

நடிகர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனையும், அவருக்கு வாக்களித்த வாக்காளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கணபதியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் இளங்கோவன் கோவை 2-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஜனவரி 12-ஆம் தேதிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இதையடுத்து, மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அந்த மனுவை ஜனவரி 15-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாகக் கூறி ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT