கோயம்புத்தூர்

கோவை காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவப் பொங்கல்

DIN

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட விவசாய அணித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற.  இந்த சமத்துவப் பொங்கல் விழாவை காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார் தொடக்கிவைத்தார்.
 இதில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தனர். இதற்காக கட்சி அலுவலகத்தை கிராமிய சூழலில் அலங்கரித்துப் பசு மாடுகளை அழைத்து, பூஜை நடத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர். 
 இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கே.எஸ்.மகேஷ்குமார், கணபதி சிவகுமார், கோவை செல்வன், உமாபதி, திருமூர்த்தி, கருணாகரன், வழக்குரைஞர் கருப்பசாமி, சொக்கம்புதூர் கனகராஜ், கே.வி.செல்வராஜ், சர்க்கிள் தலைவர் காலனி ஜனார்த்தனன், அசோக்குமார், ரூபட், ரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT