கோயம்புத்தூர்

நான்கு மாத குழந்தை சாவு: காவல் துறையினர் விசாரணை

DIN

கோவை,  சரவணம்பட்டி அருகே  4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கோவை, சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி. மகள் பூஜாஸ்ரீ(4 மாதம்).  இந்நிலையில்,  வீட்டில் படுத்திருந்த குழந்தை பூஜாஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி செவ்வாய்க்கிழமை காலை மயங்கிக் கிடந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  மேலும்,  குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததற்கு பின்பே இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT