கோயம்புத்தூர்

விஷம் குடித்த மளிகை வியாபாரி சாவு; மனைவி கவலைக்கிடம்

DIN

கோவை, போத்தனூரில் விஷம் குடித்து மளிகை வியாபாரி  புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை,  போத்தனூர் மேட்டூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் செல்லப்பன் (60).  இவரது மனைவி பொன்னாம்மாள் (55). இவர்கள் வீட்டின் அருகே மளிகைக் கடை நடத்தி வந்தனர்.  
இந்த நிலையில்,  செல்லப்பன் கடையிலுள்ள நாற்காலியில் புதன்கிழமை காலை மயங்கிக் கிடந்துள்ளார்.  அவரது மனைவி வீட்டில் மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.  அப்போது கடைக்குப் பொருள்கள் வாங்க வந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் செல்லப்பனை உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவர் உயிரிழந்தார்.  அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,  கணவன், மனைவி இருவரும் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT