முகப்பு
கோயம்புத்தூர்

ஆதரவற்ற குழந்தை மீட்பு

கோவையில் பிறந்து 20 நாள்களே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 15 மே, 2018 at 3:54 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கோவையில் பிறந்து 20 நாள்களே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத் தொட்டில் குழந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிறந்து 20 நாள்களே ஆன ஆண் குழந்தையை பெற்றோர் அங்குள்ள தொட்டிலில் விட்டுச் சென்றனர்.
அந்தக் குழந்தையை மீட்ட மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு பச்சிளங்குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.