முகப்பு
கோயம்புத்தூர்

அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக  துண்டுப் பிரசுரம்: திமுகவினர் 50 பேர் கைது

அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக திமுகவினர் 50 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 7:54 AM
பகிர்:

அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக திமுகவினர் 50 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
  கோவை குறிச்சி நகராட்சி முன்னாள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர் கோவை, சுந்தராபுரம் பகுதியில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர். 
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போத்தனூர் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
 இதனால், காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக 22 பெண்கள் உள்பட 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.