முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிப்பு

கோவை, போத்தனூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:33 AM
பகிர்:

கோவை, போத்தனூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, வெள்ளலூரை அடுத்த சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜெ.நிர்மலா (18). இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கால்நடைப் பிரிவில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார். 
இந்த நிலையில்,  அவர் வெள்ளலூர் ராமசாமி கவுண்டர் வீதியில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நிர்மலா அணிந்திருந்த இருந்த 3 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.