கோயம்புத்தூர்

ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை

DIN

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.18 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் தொடக்கி வைத்தார்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 22 ஆவது வார்டு காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க ஆழ்துளை கிணறு அமைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் வீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.18 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ள பணியை கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் பூமி பூஜை போட்டு தொடக்கி வைத்தார். இப்பணி நிறைவடைந்தவுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் ரகசிய குறியீடுடன் நவீன அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 20 லிட்டர் குடிநீரை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல் கிக்கானி மேல்நிலைப் பள்ளி அருகே ரூ.13.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியையும் அம்மன் கே.அர்ச்சுணன் தொடக்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT