கோயம்புத்தூர்

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

மேட்டுப்பாளையத்தில் சொந்த வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனைத்து இந்தியா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் எம்.மோகனகிருஷ்ணன், செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.  
இதுகுறித்து மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: நாங்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக வாகனத் தொழில் செய்து வருகிறோம். ஆனால் எங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், சட்டத்துக்கு புறம்பாகவும் சிலர் சொந்த வாகனங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன், எங்களது தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சொந்த வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்கள் மீது எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT