கோயம்புத்தூர்

பேருந்து மோதியதில் தனியார் பயிற்சி ஊழியர் சாவு

DIN

திருப்பூர் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் கார்த்திகேயன் (20). இவர் கணியூரில் உள்ள தனியார் தொழிற்கூடத்தில் பணி பயிற்சி பெற்றுவந்தார். இவர் வியாழக்கிழமை இரவு பயிற்சி முடிந்து தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
கணியூர் சுங்கச் சாவடி அருகே சாலையை கடக்கும் போது கோவையில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் வெள்ளிக்கிழமை இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரான சேலத்தைத் சேர்ந்த அழகரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT