கோயம்புத்தூர்

வீடு, வீட்டுமனை தொடக்க விழா 

DIN

கோவை மாவட்டம், காரமடை அருகே என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வீடு, வீட்டுமனை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 காரமடையை அடுத்த ஒன்னிபாளையம் ஸ்ரீ கன்னிகா நகரில் என் நிலம் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில்  டிடிசிபி அங்கீகாரம் பெற்ற வீடு, வீட்டு மனைத் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆ.ஹென்றி  தலைமை வகித்தார். என்நிலம் பில்டர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பங்குதாரரும், அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ச.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 
இதில், மரக்கன்றுகளை நட்டு முதல் வீடு மற்றும் வீட்டு மனை விற்பனையை சமூகஆர்வலர் பி.அன்பரசன்,  ரூட்ஸ் குழுமங்களின்இயக்குநர் கவிஞர் கவிதாசன், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், சசிகுமார், கார்த்திக் கே.ஓய்.பொன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT